பிக் பாஸ் 4 துவங்குகிறது.. வைரலாகும் ப்ரொமோ வீடியோ இதோ
Written By DTH News on 30 August 2020 | 12:15 PM
https://chat.whatsapp.com/Ijpi6Vc2tkN6w5w7uq5fs5
தமிழில் பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சனை வெடித்ததால் அது துவங்க முடியாமல் போனது. மேலும் ரசிகர்களும் இந்த வருடம் பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் விதத்தில் திடீரெனெ பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கமல்ஹாசன் புதிய கெட்டப்பில் வந்து பேசுகிறார். இந்த புகைப்படங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே வெளிவந்து பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது பிக் பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கில் எடுத்தது என கூறப்படவில்லை.
தற்போது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் 4 ப்ரொமோவில் கமல் கொரோனா பற்றி தான் அதிகம் பேசி இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது..

"நலமா.. நாம் எதார்த்தமாக ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. உலகெங்கிலும் பரவி இருக்கும், மருந்தே கண்டுபிடிக்கப்படாத, ஒரு நோய், இந்த உலகம் ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தி இருக்கிறது. எங்காவது அமேசானில் தீப்பிடித்தால் எங்கு நமக்கு ஆக்சிஜன் குறைகிறது. நீங்களும் நானும் வேலைக்கு போகலைனா.. நம்மை நம்பி இருக்குற ஆட்டோ ரிக்ஷா டிரைவர், பஸ் ஓட்டுநர், அடிக்கடி சாப்பிட போகும் ஹோட்டல், டீ கடை, மீன் கடைகார ஆயா, அவங்களுக்காக மீன் பிடிக்க போகிற மீனவர்கள்.. இப்படி சங்கிலி தொடராக.. நம்மை நம்பி இருப்பவர்கள் ஐந்து மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்கனும்.. ஆனால் அதுக்காக வீட்டிலேயே வேலை இல்லாமல் இருக்க முடியாது. WHO அதாவது உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தி இருப்பது படி பாதுகாப்பாக இருப்போம்.
இதோ நான் வந்துட்டேன். அதே மாதிரி நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள், நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை.. நாமே தீர்வு! சரி இப்போ வேலையை ஆரம்பிக்கலாமா" என கமல் பேசி உள்ளார்.
தற்போது கொரோனா காரணமாக தியேட்டர்கள் கூட மூடப்பட்டு இருப்பதால் பொழுதுபோக்கிற்கு எதுவும் இல்லாமல் இருக்கும் ரசிகர்களுக்கு இனி பிக்பாஸ் தான் என்டர்டெயின்மென்ட் ஆக இருக்க போகிறது.
இதில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள பிரபலங்களை தேர்வு செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற ஒரு போட்டியாளர்கள் லிஸ்ட் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில் ரம்யா பாண்டியன், சுனைனா, அதுல்யா ரவி, வித்யூலேகா ராமன், கவர்ச்சி நடிகை கிரண் ரத்தோட் உள்ளிட்டவர்கள் பெயரும் இடம் பெற்று இருந்தது. இது பற்றி விளக்கம் கூறி இருந்த சுனைனா தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டால் இப்போது ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை எல்லாம் யார் நடித்து முடிப்பது என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
ZEE TAMIL HD உட்பட மேலும் 6 HD சனல்கள் Videocon d2h இல்!!! விபரம் உள்ளே☛
Written By DTH News on 18 August 2020 | 1:31 PM
![]() |
தமிழ் வாடிக்கையாளர்கள் உட்பட மாற்று மொழி வாடிக்கையாளர்கள் வரைக்கும் Zee Network HD சனல்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு இப்போது சமயம் வந்துவிட்டது.
- Zee Tamil HD இது ஒரு தமிழ் சனல். இது 979 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடையவிலையானது 19 இந்திய ரூபா.
- Zee Telugu HD இது ஒரு தெலுங்கு சனல். இது 984 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 19 இந்திய ரூபா.
- Zee Cinimalu HD இது ஒரு தெலுங்கு சனல். இது 985 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 16 இந்திய ரூபா.
- Zee Keralam HD இது ஒரு மலையாள சனல். இது 993 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 8 இந்திய ரூபா.
- Zee Kannada HD இது ஒரு கன்னட சனல். இது 997 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலை 19 இந்திய ரூபா.
- & Prive HD இது ஒரு இங்கிலீஷ் மூவி சனல். இது 947 சனல் நம்பரில் கிடைக்கின்றது. இதனுடைய விலையானது 19 இந்திய ரூபா.
சீரியல் புதிய எபிசோடுகள் மீண்டும் எப்போது துவங்கும்? சன் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Written By DTH News on 19 July 2020 | 12:54 PM
கொரோனா காரணமாக மக்கள் வீடுகளை விட்டு கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் அவர்கள் பொழுதுபோக்கிற்காக அதிகம் நம்பி இருப்பது தொலைக்காட்சிகளை தான். ஆனால் அந்த அளவுக்கு மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்து வரும் டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் ஷூட்டிங்கை மேற்கொள்ள முடியாமல் அனைத்து தொலைக்காட்சிகளும் திணறி வருகின்றன.அதனால் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் நிறுத்தப்பட்டு தற்போது பழைய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன. பல வருடங்களுக்கு முன்பு பார்த்த சீரியல்களை மீண்டும் மக்கள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதனால் சீரியல் ஷூட்டிங் மீண்டும் துவங்கி உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து தான் இந்த ஷூட்டிங் நடத்தபட்டு வருகிறது என தெரிகிறது. இந்நிலையில் சீரியல்களின் புதிய எபிசோடுகளினை எப்போது மீண்டும் ரசிகர்கள் பார்க்கலாம் என்ற தகவல்களை தொலைக்காட்சி சேனல்கள் வெளியிடாமல் இருந்தன.தற்போது சன் டிவி முதல் முறையாக அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சன் டிவி கூறியிருப்பதாவது.."உங்கள் அபிமான மெகாத் தொடர்கள், புதிய திருப்பங்களோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் புத்தம் புதிய எபிசோடுகளுடன் வருகிறது.. ஜூலை 27 முதல், உங்கள் சன் டிவியில்.." என குறிப்பிட்டுள்ளனர்.அதனால் கொரோனாவுக்கு முன்பு பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த சீரியல்களின் புதிய அத்தியாயங்களை இன்னும் ஒருவாரத்தில் மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சித்தி 2, நாயகி, கல்யாண வீடு போன்ற சீரியல்களை மீண்டும் பார்க்க காத்திருப்பதாக ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.இது போல மற்ற தொலைக்காட்சிகளும் அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கொரோனா தொற்று காரணமாக ஷூட்டிங் நடத்துவதில் பல்வேறு சிக்கலைகளையும் குழுவினர் சந்தித்து வருகின்றனர். அதில் முக்கியமானது நடிகர்களை மீண்டும் ஒன்றிணைத்து ஷூட்டிங் நடத்துவதில் உள்ள சிக்கல் தான். பெரும்பாலும் தமிழ் சின்னத்திரையில் கேரளா, கர்நாடகா போன்ற மாநில நடிகைகள் தான் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அவர்கள தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் மீண்டும் அவர்கள் சென்னை வர முடியாத சூழ்நிலை தான் உள்ளது.அப்படி வந்தாலும் இ-பாஸ், குவாரன்டைன் உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. அதனால் பல முன்னணி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் அதில் இருந்து விலகுவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான அக்னி நட்சத்திரம் தொடரில் வில்லியாக அகிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மெர்ஷினா தான் கேரளாவில் இருப்பதால் இனி மீண்டும் சென்னை வர முடியவில்லை அதனால் வேறு ஒரு நடிகை அந்த ரோலில் இனி நடிப்பார் என அறிவித்து இருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது."வெளியில் செல்வது பாதுகாப்பற்ற ஒன்றாக இருக்கிறது. அதனால் என்னால் வேலைக்காக வாராவாரம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வர முடியாது. ஏனென்றால் சென்னையில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. திருவனந்தபுரத்திலும் அப்படித் தான் இருக்கிறது. அதனால் அக்னி நட்சத்திரம் தொடர் விரைவில் மீண்டும் ஒளிபரப்பாகும். ஆனால் அதில் அகிலாவாக வேறு ஒரு புதிய நடிகை இருப்பார். பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி என அவர் கூறி இருந்தார்.மேலும் சித்தி 2 சீரியலில் நான்கு நடிகர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். பொன்வண்ணனுக்கு பதில் இனி நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார்.